Tuesday, November 19, 2019

விலையில்லா அமரர் ஊர்தி எண் : 155377.

ரயில் பெட்டியில் இறந்த உடல் செலவு இல்லாம எடுத்துச்செல்ல... அனைத்தையும் படிக்க... அனைத்தும் தெரிந்து கொள்ளுங்க... பிறருக்கும் அனுப்பி வைக்க...
இப்படி ஒரு சேவைய
Red Cross சொசைட்டி செய்வது உங்களுக்கு தெரியுமா ? எனக்கும் தெரியாது  ...இதை படிக்கும் வரை!
படியுங்கள்....... பகிருங்கள்!

Saturday, July 20, 2019

இந்திய அளவிளான உயர் பதவிகள்

நம்மில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் *IAS*, *IPS* பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்.
ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:-

Friday, October 5, 2018

முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...!!!
#முஸ்லிம்_மகளிர்_உதவும்_சங்கம் (MWAS)
முஸ்லிம் மகளீர் உதவி சங்கத்திற்கு(#MWAS) நன்கொடை மற்றும் ஜகாத்தை வாரி வழங்குங்கள் !!!
#Muslim_Woman_Aid_Society
இந்த சங்கத்தின்
மதுரை Secretary.
Retired principal arts and science college
9344150951- Jahan அக்கா
விழிப்புணர்வு கொடுங்கள் விண்ணப்பிக்க!!!
முஸ்லிம் பெண்களே விதவைகளே! ஏழை பெண்களே விண்ணப்பியுங்கள்! !
ஒவ்வொரு மாவட்டத்திலையும் இந்த #சங்கம் உண்டு!!!
தட்டி எழுப்புங்கள்!!
சிறு தொழில் செய்ய பயிற்சி வேண்டுமா விண்ணப்பியுங்கள்!!
சிறு தொழில் #சுய_தொழில் செய்யனுமா விண்ணப்பியுங்கள்.
ஏழை முஸ்லிம் பெண்களே!!
கல்வி வேண்டுமா Phd வரை படிக்கனுமா உங்கள்
மாவட்ட MWAS யை நாடி செய்து கொடுக்க சொல்!!
உங்கள் மாவட்ட சங்கங்களை அணுகவும்.
சங்கத்தின் தோற்றம்:-
ஆதரவற்ற முஸ்லிம் விதவைகளுக்கு மாதந்தோறும் #உதவித்_தொகை வழங்கி அவர்களுக்கு உதவும்பொருட்டு கர்நாடக நவாப் அவர்களால்
“முகம்மதியன் கோஷா விதவை சாரிட்டி”
என்ற பெயரில் 1.10.1892 ல் ஒரு சங்கம் துவங்கப்பட்டது.
பின்னர் இதன் பெயர்
“முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம்”
என்று மாற்றியமைக்கப்பட்டது.
இச்சங்கம் சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் (ம) அலுவல்சாரா சம்பள அலுவலர்
(கர்நாடக உதவிதொகைகள்)
(Pay master Carnatic stipends & Collector of Madras) அவர்களை தலைவராகவும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (ம) அலுவல்சாரா உதவி சம்பள அலுவலர் (கர்நாடக உதவித்தொகைகள்)
(Assitant Pay Master Carnatic Stipends
& PA (G) to the Collector of Madras)
துணைத் தலைவராகவும் கொண்டு இயங்கி வருகிறது.
அரசு மானியம் (1:1) வீதத்தில் கிடைத்தலும் அதன் நடைமுறையும்:-
மேற்படி முஸ்லிம் மகளிர் சங்கத்தின் உறுப்பினர்களின் சந்தா தொகையையும் பொதுமக்களிடமிருந்து பெறும் நன்கொடையையும் சேர்த்து தணிக்கை செய்தப்பின் எவ்வளவு தொகை வருகிறதோ
அதில் பாதித்தொகையை (50 சதவீதம்) அரசு மானியமாக
ஒவ்வொரு ஆண்டும் வழங்கிட அரசாணை(நிலை)எண்
406 பொதுத் (அரசியல்) துறை நாள்1.8.1991 ல்
சங்கங்கள் பதிவுச்சட்டம் XXI of 1860 ன் கீழ்
பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் அரசாணை (நிலை) எண் 77பிவ,மிபிவ(ம)சிந (எஸ்1) துறை, நாள் 11.12.2001 ன் படி ஒவ்வொரு ஆண்டும் மேற்படி சங்கம் வசூலிக்கும் மொத்ததொகைக்கு இணையான தொகையை மானியமாக வழங்கிட அரசு உத்திரவிட்டுள்ளது.
1991 -ல் இந்த சங்கத்திற்கு மானியம் வழங்குதல் சட்டபூர்வமாக அங்கிகரிக்ப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ்நாட்டில் 2001-ல் தான்
#மானியம் இந்த சங்கத்திற்கு வழங்குதலே வருது.
பத்தாண்டுகால இடைவெளி ..
நமக்கு விழிப்புணர்வு இல்லாததே இந்த பத்தாண்டு
கால இடைவெளி
மேற்படி சங்க அமைப்பினை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சங்கங்களின் பதிவுச்சட்டதின் கீழ் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் என்ற பெயரில்
துவங்கிட அரசு ஆணை நிலை எண் 14, பிற்படுத்தப்பட்டோர்,
மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்
நலத்துறை நாள் 23.4.2007 ல் உத்திரவிடப்பட்டு
செயல்பட்டு வருகிறது.
அதாவது,
2007-கலைஞர் நடைமுறையை படுத்தினார் அதாவது 1991 Act ஐ தமிழ்நாட்டில் மானியம் வழங்கும் #சட்டம் 2001 ல் வந்ததையும் குறிப்பிட்டு நடைமுறை படுத்தினார்.
அதாவது
For example,
மாவட்ட சங்கம் 4 லட்சம் திரட்டி கொடுத்தால் Govt 4 லட்சம் கொடுக்கும் Total 8 லட்சம் வருமாம்.
(1:2) என்ற விகிதத்தில் மானியம் வழங்குதல்:-
அதை கடைசிகாலத்தில் ஜெ 1:2 ஆக ஆக்கியுள்ளார்.
அதாவது
For example,
நாம 4 லட்சம் திரட்டி குறிப்பிட்ட மாவட்டத்தில் திரட்டி கொடுத்தால் Govt 8 lakhs தறுமாம். So totally 12 lakhs.
கொஞ்சம் தாமதம் ஆகும் ஆனால் அரசுமானியம் கிடைத்துவிடும் ஒவ்வொரு ஆண்டும்
இச்சங்கங்களின் முக்கிய நோக்கங்கள் யாவை ?
அ) ஆதரவற்ற / ஏழை/ வயதான முஸ்லிம் பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குதல் மற்றும் தேவையான பிற உதவிகள் வழங்குதல் மற்றும் விதவைப் பெண்களில் மறு திருமணத்திற்கு நிதியுதவி செய்தல்.
ஆ) ஆதரவற்ற / ஏழைப் பெண்களுக்கு வியாபாரம், தொழில், கைவினைப் பொருட்கள் செய்ய பயிற்சி அளித்தல் மற்றும்
வியாபாரம் தொடங்க (அல்லது) தொழில் செய்ய நிதி
#உதவி அளித்தல்.
இ) மத்திய மற்றும் மாநில அரசுகளின் சலுகைகள் இவர்களுக்கு கிடைக்க உதவி செய்தல்.
ஈ) முஸ்லிம் #மகளிர் மற்றும் குழந்தைகள் கல்வி பயில உதவித் தொகை வழங்குதல் மற்றும் அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான பிற உதவிகள் செய்தல்.
உ) முஸ்லிம் #பெண்கள் சுய உதவிக்குழுக்கள் ஏற்படுத்தி தேவையான பயிற்சிகள் அளித்தல் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் பலதரப்பட்ட
கடனுதவிகளைப் பெற்றுத் தந்து
தொழில்/ வியாபாரம்
துவங்க உதவுதல்.
இந்த மாணவியர் இல்லங்களில் சேர்வதற்கான தகுதிகள் எவை ?
அ)இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவியராக இருத்தல #தமிழக_அரசு வழங்கி வருகின்றது.
இச்சங்கத்தில் உறுப்பினராகச் சேருவதற்கு யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்?
உறுப்பினர் #கட்டணம் எவ்வளவு ?
புரவலர் உறுப்பினர், ஆயுள் உறுப்பினர், சாதாரண உறுப்பினர் ஆகிய மூன்று வகை உறுப்பினர்களில் ஏதாவது ஒரு உறுப்பினராகச் சேர இச்சங்கத்தின் செயலாளர் அவர்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்;
புரவலர் உறுப்பினருக்கு ஒரே ஒருமுறை ரூ.5000/- உறுப்பினர் கட்டணம் செலுத்தவேண்டும்.
ஆயுள் உறுப்பினராகவும் ஒரே ஒருமுறை ரூ.1,000/- செலுத்தினால் போதுமானது.
சாதாரண உறுப்பினராகச் சேர ஆண்டுதோறும் ரூ.500/- உறுப்பினர் சந்தா செலுத்தவேண்டும்.
இதனைத் தவிர சாதாரண உறுப்பினர்கள் சேர்க்கைக் கட்டணம் ரூ.100/-ம் செலுத்தவேண்டும்.
தனிநபர்கள் மட்டுமல்லாது நிறுவனங்களும் உறுப்பினராகச் சேரலாம்.
இச்சங்கங்கள் அதன் நிதி ஆதாரத்தை எப்படி திரட்டுகின்றன ?
இச்சங்கங்கள் உறுப்பினர் கட்டணம்/சந்தா
மற்றும் நன்கொடை வசூல் மூலமாக நிதியைத் திரட்டுகின்றன.
தமிழக அரசு முன்னரே குறிப்பிட்டவாறு சங்கங்கள் திரட்டிய நிதிக்கு இணை மான்யமாக ஒவ்வொரு சங்கத்திற்கும் அதிகபட்சம் (1:2) விகிதத்தில் ஆண்டுதோறும் வழங்குகின்றது.
இச்சங்கங்களிடம் உதவி பெறுவதற்கான தகுதிகள் என்ன?
அ) முஸ்லிம் மகளிர் அல்லது பெண் குழந்தையாக இருத்தல் வேண்டும மற்றும்
ஆ) ஆதரவற்றவராக/ ஏழையாக/ முதியவராக/ விதவையாக இருத்தல் வேண்டும்.
1:2 இச்சங்கங்களிடம் உதவி பெற எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?
உதவி பெற தகுதியுள்ளவர்கள் அவர்களது உதவிக் கோரிக்கையை எழுதி இச்சங்கத்தின் கௌரவச் செயலாளர் (அல்லது) இணைச் செயலாளரிடம் விண்ணப்பிக்கவேண்டும்.
#Note:-
கல்வியளிப்பது சதக்கத்துல் ஜாரியா
நிலையான #தர்மம்.
ஒருவனை வாழவைத்தால் முழு உலகையும்
வாழவைத்ததிற்கு சமம்

Saturday, July 28, 2018

பல புற்றுநோயிற்கான மருந்து

இரத்தப் புற்றுநோய்
மூளைப் புற்றுநோய்
மார்பகப் புற்றுநோய்
பெருங்குடல் புற்றுநோய்
கல்லீரல் புற்றுநோய்
நுரையீரல் புற்றுநோய்
புரோஸ்டேட் புற்றுநோய்
கருப்பை புற்றுநோய்

Tuesday, July 3, 2018

சிறு குறு விவசாயிகளுக்கான சான்றிதழ்

திண்டுக்கல் மாவட்ட ரெட்டியார்சத்திரம் ஒன்றிய விவசாயிகள் கவனத்திற்கு
ரெட்டியார்சத்திரம் பகுதி விவசாயிகளுக்கு நாளை 03-07-2018 செவ்வாய் கிழமை காலை 10 .00 மணியளவில் திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் சிறு குறு விவசாயிகளுக்கான சான்றிதழ் வழங்கும் முகாம் நடைபெறுகிறது
எனவே சிறு குறு விவசாயிகள் அனைவரும் இந்த முகாமில் கலந்துகொண்டு சான்றிதழை பெற்றுச் செல்லுமாறு அழைக்கப்படுகிறது
சான்றிதழ் பெற கொடுக்கப்பட வேண்டிய ஆவணம்
விவசாயின் பாஸ்போட் சைஸ் புகைப்படம் -2
ஆதாரஅட்டை ஜெராக்ஸ்
ரேஷன் கார்டு ஜெராக்ஸ் மற்றும்
விவசாயின் சிட்டா நகல்
ஆகியவற்றை எடுத்துச் செல்லவும்
சிறு குறு விவசாயிகளுக்கான நில அளவுகள்
நஞ்சை என்றால் 2. ½ ஏக்கர் நில பரப்பு இருக்கவேண்டும்
புஞ்சை என்றால் 5 ஏக்கர் நில பரப்பு இருக்கவேண்டும்
மேற்கண்ட சிறு குறு விவசாயிகளுக்கு அரசு மானியத்துடன் சொட்டுநீர் பானம் மற்றும் தெளிப்பூ நீர் பாசனம் மழைதூவான் போன்றவை அமைத்து தரப்படுகிறது
மேலும் விவரங்களுக்கு
தொடர்பு கொள்ள
திரு P. வெள்ளைச்சாமி அவர்கள்
உதவி வேளாண்மை அலுவலர்
ரெட்டியார்சத்திரம்
செல் நம்பர் : 8610867118
மேலும் மானிய விவரங்களுக்கு
தொடர்பு கொள்ள
திரு. திருமலைச்சாமி
வேளாண்மை உதவி இயக்குநர்
ரெட்டியார்சத்திரம்
செல் நம்பர் : 8667827204

Friday, June 1, 2018

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வாணிபத்தில் DA என்றால் என்ன?



DA என்பதன் விரிவாக்கம் Documents against Acceptance. இந்த முறையில் ஒரு ஏற்றுமதியாளர் சரக்கை அனுப்பிவிட்டு ஆவணங்களை வங்கியில் சமர்பிப்பார். வங்கி அதை இறக்குமதியாளர் வங்கிக்கு அனுப்பும். இறக்குமதியாளர் ஒரு உறுதிமொழி கடிதம் (நான் குறிப்பிட்ட நாளில் பணம் கட்டி விடுகிறேன் என்று) மட்டும் கொடுத்துவிட்டு அந்த ஆவணங்களை பெற்று துறைமுகத்தில் இருந்து சரக்கை பெற்றுகொள்வார். இந்த வழிமுறை சற்று ஆபத்தானது என்பதால் நன்கு தெரிந்த இறக்குமதியாளரிடம் மட்டுமே இதுபோன்ற நடைமுறையில் தொழில் செய்யலாம். புதியவர்களிடம் இப்படி தொழில் செய்வது ஆபத்தானது.
நன்றி : பாலாஜி பொன்னம்பலம் 

Wednesday, March 7, 2018

சமூக சேவகரை பாராட்டுவோம்..!
சவுதி அரேபியாவில், ரியாத் மாநகரில் சொந்தமாக சிறு தொழில் நடத்தி வரும் (சேட்டு) என்று செல்லமாக அழைக்கும் இவருடைய பெயர் ஜமால், இவரின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் மேலூர்..!
பல வருடங்களாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைவனுக்காக மட்டுமே அடி பணிந்து, சேவை செய்து வருகிறார்..!
குடும்ப கஷ்டங்களுக்காக தாய், தந்தை, மனைவி, மக்களை இழந்து வளைகுடா நாட்டில் பணிபுரிந்து வரும் மக்களில் சிலர் இயற்கையாகவோ, விபத்திலோ, இறந்து போய்விடும் சூழ்நிலைகளில், அதை எப்படி எதிர்கொள்வது, மாற்றுமத சகோதரர்கள் பெரும்பாலானோர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கும்போது, அதை எளிதில் முடித்து கொடுத்து உதவி செய்து வருகிறார்..!!
இதுவரை நூற்றுக்கணக்கானவர்கள் உடல்களை அடக்கம் செய்வதற்க்கும், ஊருக்கு அனுப்பவும் உதவியுள்ளார்..
இந்திய தூதரகம் மற்ற விஷயங்களில் எப்படியோ, இறந்தவர்கள் விஷயத்தில் உதவியாக இருப்பதாகவும் கூறுகிறார்..!
சகோதரருக்கு வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்..!
இவரின் தொடர்பு எண்: 0507863307,
அன்புடன்; நம்புதாளை ஃபாரிஸ்,
ரியாத், சவுதி அரேபியா..